கடம்ப மலர்

கடம்ப மலர்

ஆனாய நாயனார் சிவபக்தி

ஆனாய நாயனார் சிவபக்தி ஆனாய நாயனார் நீர் வளம், நில வளம் பொருந்திய சோழ நாட்டில் ஆயர் குலத்தில் தோன்றியவர். இறைவனிடத்தில் எல்லை இல்லாக் காதல் கொண்டு வாழ்ந்தவர். ஊரில் உள்ள கன்று காலிகளை ஓட்டிக் கொண்டு போய்த் தினந்தோறும் முல்லை நிலம் சென்று மேய்த்து வருவார். ஒவ்வொரு நாளும் அவர் மாடுகளை மேய்க்க அழைத்துச்…

பாம்பும் மயிலும்

பாம்பும் மயிலும் திருப்புகழ் பாடுவதற்குக் காரணம் மனம் ஒருமுகப் பட வேண்டு மென்பதுதான். மனத்தின் சலனம் ஒழிந்தால் அது ஒருமுகப்படும். நாம் படிக்கிற பாட்டு மனத்தில் பதிய வேண்டுமானால் மற்றொன்றை நினைக்காமல் அதில் ஒன்று படவேண்டும். எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கும் மனத்தை ஓரிடத்தில் நிலையாக நிறுத்த வேண்டுமானால் அதை வேறு ஒன்று அமுக்கிக்கொண் டிருக்க…

ஒளவையின் சுருக்கப் பேச்சு

ஒளவையின் சுருக்கப் பேச்சு ஒரு சமயத்தில் ஒளவைப் பாட்டியைச் சில புலவர்கள் வணங்கி, “பாட்டி, நூல்கள் யாவும் தர்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கையும் சொல்கின்றன. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்துகொள்வதற்கு வாழ்நாள் போதாது. சுருக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப் படுகிறோம். நீங்கள் சுருக்கிச் சொல்வதில் வல்லவர்கள் அல்லவா?”…

சூரசம்ஹாரம் வரலாறு

சூரசம்ஹாரம் வரலாறு முருகனுடைய வரலாறுகள் பலப்பல. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. அசுரர்கள் என்றால் ஏதோ விகார உருவம் படைத்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல. நமது உள்ளத்திலே உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகளைத் தான்…

செந்திலாண்டவன் கோயிலில் உள்ள ஆறுமுகன் வரலாறு

செந்திலாண்டவன் கோயிலில் உள்ள ஆறுமுகன் வரலாறு கொங்கை குறமங்கையின்சந்த மணம் உண்டிடும்கும்ப முனி கும்பிடும்தம்பிரானே இந்தச் செந்திலாண்டவன் கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றி அருமையான வரலாறு ஒன்று உண்டு. அதையும் தெரிந்து கொள்ளலாம் தானே. 1648ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் ஆறுமுகப் பெருமானின்…

ஞான பண்டிதன்

ஞான பண்டிதன் முருகன் இளைஞனாக, அழகனாக மட்டும் இருக்கின்றவன் இல்லை. சிறந்த வீரனாகவும் இருப்பதை தேவ சேனாபதித் திருக்கோலத்திலே பார்க்கிறோம். இத்துடன் சிறந்த அறிஞனாகவும் இருக்கிறான். ஞானப்பழமாக அன்னைக்கும், ஞானகுருவாகவே தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய கதைகள் கூறுகின்றன. அன்றொரு நாள் காலையிலே, அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் அமர்ந்திருக்கிறார்கள் கைலைமலையிலே. அங்கு வந்து…

வில்லேந்திய வேலன் குகசுவாமிமூர்த்தி

வில்லேந்திய வேலன் குகசுவாமிமூர்த்தி கங்கையாற்றின் கரையிலே சிருங்கிபேரபுரம் என்று ஓர் ஊர். அங்குள்ள வேடர் தலைவன் – குகன். கங்கையிருகரையையும் கணக்கிறந்த நாவாய்களையும் உடையவன் அவன். அவனுக்கு சக்ரவர்த்தித் திருமகன் ராமனிடத்து அளவிடற்கரிய அன்பு, தாய் உரைசெய, தந்தை ஏவ கானாளப் புறப்படுகின்றான் ராமன், லக்ஷ்மணனும் சீதையும் உடன் வர கங்கைக்கரை வந்து சேர்கிறான். கங்கையைக்…

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன?

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன? சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். முருகனுக்கே ஒரு பெயர் சரவணன் என்று அவன் பிறப்பைப் பற்றிய கதை தெரியும். இறைவனது நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த பொறிகளை அக்கினி ஏந்தி வாயுவிடம் கொடுக்க, வாயு கங்கையிலே விட, கங்கை சரவணப் பொய்கையில் விட்டுவிடுகிறாள். அங்கே ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக…

திருச்செந்தூர் வரலாறு

திருச்செந்தூர் வரலாறு ஆறுமுகன் கோயில் கொண்டிருக்கும் இடங்கள் ஆறு என்பதை நக்கீரர் விளக்கமாக உரைக்கிறார். அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை என்பதையும் அறிவோம். இந்த இடங்களே முருகனது படைவீடுகள் என்றும் குறிக்கப்படுகின்றன. இந்தப் படை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்பதே இன்றைய திருச்செந்தூர். பண்டைத் தமிழ் நூல்களில் இந்தத்தலம் திருச்சீரலைவாய்,…

காவடி வரலாறு

காவடி வரலாறு காவடி எடுப்பதைப் பற்றி ஒரு வார்த்தை, இந்த வழக்கம் எபபடி வந்தது? இதற்கு ஒரு கதை. சூரபதுமனைச் சேர்ந்த அசுரர்களில் ஒருவனான இடும்பன் போருக்கு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடி அகத்தியரைச் சரண் அடைகிறான். அகத்தியரும் தாம் சிவபெருமானிடம் பெற்று கேதாரத்தில் வைத்து விட்டு வந்திருந்த சிவகிரி, சக்தி கிரிகளை எடுத்து வருமாறு ஏவுகிறார்.…