கடம்ப மலர்
தமிழர்களின் வாழ்வியலோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு மலர்.
ஆன்மீகப் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?
மன அழுத்தம் குறைய
நேர்மறை எண்ணங்கள் பெருக, வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள.
புத்தகங்களைப் படிப்பது
மட்டும் ஆன்மீகமல்ல; அந்தப் புத்தகங்கள் காட்டும் வழியில் ஒரு அடி எடுத்து வைப்பதே உண்மையான பயணம்.”
இறைவனின் திருவருள்
பேரின்பத்தையும் அடையத் துடிக்கும் ஆன்மாக்களுக்கு, முறையான வழிகாட்டுதல் என்பது ஒரு ஊன்றுகோல் போன்றது.
சமீபத்திய இடுகைகள்
நிறையழிதல்
Love | The Post-marital love | #1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
யாமத்தும் ஆளும் தொழில்.
Kaamam Enavondro Kannindren Nenjaththai
Yaamaththum Aalum Thozhil
Translation: The thing called lust is a heartless power It sways my mind at midnight hour
Explanation: Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy
மு. வரதராசனார்:
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
சாலமன் பாப்பையா:
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.
மு. கருணாநிதி:
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது


