கடம்ப மலர்

கடம்ப மலர்

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் வரலாறு செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலே திருவாதவூரிலே ஆமாத்திய அந்தணர் குலத்திலே இறைவனருளால் தோன்றியவர் திருவாதவூரர். இளமையிலே எல்லாக் கலைகளையும் பயின்ற வாதவூரரைப் பாண்டியன் தன் அமைச்சராக அமர்த்தித் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துப் பாராட்டினான். வாதவூரர் பாண்டியனுக்கு அமைச்சராய் அறநெறி வழுவாமல் தம் கடமையைச் செய்து வந்தார். ஆயினும் உலகியற் பற்றின்றி மெய்ப்பொருளுணர்த்தவல்ல அருட்குருவை நாடியிருந்தார்.…

அருளாளன்

அருளாளன் கொட்டு மேள ஒலி இனியதாகக் கேட்கிறது. நாயனத்தின் ஒலியும் நெடுந்தூரம் வரைக்கும் கேட்கிறது. பெரிய ஆரவாரம்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கிழவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே ஆரவாரம் செய்கிறார்கள். இது ஏதோ ஒரு கல்யாண ஊர்வலம் போல இருக்கிறது. ஆம்! கல்யாண ஊர்வலந்தான்! பேரழகர், சிறந்த காளை, திருநாவலூரராகிய நம்பியாரூரர் தம் கல்யாணத்தின் பொருட்டு…

தம்பிரான் தோழர்

தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தோழராக இருப்பவர். தம்பிரான் தோழர் என்பது அவருடைய பெயர்களில் ஒன்று. இறைவனை மிக எளியவனாக எண்ணிச் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். இறைவனிடம் மிக நெருங்கிக் கூறும் முறையில் அவை அமைந்திருக்கும். தமக்கு வேண்டிய பொருள்கள் இன்னவையென்றும், அவற்றை உடனே தந்தருள வேண்டுமென்றும் பாடுவார். இன்னும் சில பாடல்கள் இறைவனைப்…

தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன்

தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன் காமனை எரித்தான் சிவபெருமான் என்பதும், அவன் ஒரு குழந்தையைப் பெற்றான் என்ற செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பாடுபோலத் தோன்றுகின்றன. முருகன் சிவபெருமானுக்குக் குழந்தை. உலகில் ஆணும் பெண்ணும் கலந்து இல்வாழ்க்கை நடத்தும்பொழுது அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்னாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உண்டாகிறது; காம நுகர்சியை அடைகிறார்கள்.…

இரட்டை விலங்கு

இரட்டை விலங்கு தாமரைப் பூவாகிய அழகிய பீடத்தில் சதுர் முகப் பிரமன் வீற்றிருக்கிறான். காலையில் செய்ய வேண்டிய ஔபாசனத்தையும் வேதபாராயணத்தையும் செய்தாகிவிட்டது. கலைமகள் அருகிருந்து தான் செய்யவேண்டிய உதவிகளைச் செய்ய, நெறி முறை வழுவாமல் செய்யவேண்டிய வைதிக காரியங்களைக் குறைவின்றி நிறைவேற்றிய பிரமதேவனுக்குச் சிறிது பசித்ததுபோலும்! தன்னுடைய கணக்குச் சுருணையை எடுத்துவரச் சொல்லிப் பார்க்க உட்கார்கிறான்.…

நாகாசல வேலவன்

நாகாசல வேலவன் அருணகிரி நாதர் பாடிய அற்புதமான நூல்களுள் கந்தர் அநுபூதி, சுருங்கிய உருவத்தில் செறிந்த பொருளை உடையதாய் விளங்குகிறது. முருகனது திருவருளால் பெற்ற அநுபவத்தின் சிறப்பைப் பலபடியாக எடுத்துச் சொல்வது அது. கந்தவேளின் திருவருளால் அநுபூதி பெற்று, விருந் துண்டவன் ஏப்பமிட்டாற் போலத் தம் அநுபவாதி சயத்தைப் பாடியது அநுபூதி. தாயுமானவர், கந்தர் அநு…

கங்கைப் புராணம்

கங்கைப் புராணம் காசியில் கங்கை ஓடுகிறது. அந்தக் கங்கையில் நீராடினால் பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இந்த நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. தம்முடைய இறுதிக் காலத்தில் காசிக்குச் சென்று அங்கே உயிர் நீத்துவிட வேண்டும் என்றும், அங்கேயே ஜலசமாதி அடைந்துவிட வேண்டும் என்றும் பல பெரியவர்கள் எண்ணி அங்கே போய்…

அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால்

அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால் திருச்சிக்கு அருகில் திருஎறும்பூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது அதைத் திருவரம்பூர் என்று வழங்குகிறார்கள். திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வரும் வழியில் அந்தத் தலம் இருக்கிறது. சிறிய குன்று. அங்கே எறும்பு ஆண்டவனைப் பூசை பண்ணிப் பேறு பெற்றதாம். திருவானைக்காவல் என்ற தலத்தைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கே யானை பூசை…

தேவசேனை திருமணம்

தேவசேனை திருமணம் எம்பெருமான் ஆறுமுகமும் பன்னிரு திருத்தோளும் உடையவன். அந்தப் பன்னிரண்டு திருத்தோளையும் ஒருபெருமாட்டி அணைகிறாள். அவள் யார்? அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற இரண்டு மகளிரும் திரு மாலின் குழந்தைகள். திருமால் முருகனுக்கு மாமன். ‘நாம் நம் அத்தை மகன் முருகனை உரிமையோடு அடையலாம்’ என்ற அகங்கார நினைப்பு அவர்களுக்கு இல்லை. அத்தை மகளையோ, மாமன்…

சோமாஸ்கந்தமூர்த்தி

சோமாஸ்கந்தமூர்த்தி இந்திரன் ஒரு சமயம் திருப்பாற்கடலுக்குச் சென்றிருந்தான். திருமால் பாம்பணையில் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மார்பில் சோமாஸ்கந்தமூர்த்தி இருந்தார். ஒரு பக்கம் சிவன், மற்றொரு பக்கம் உமை, நடுவில் முருகப் பெருமான் உள்ள கோலமே சோமாஸ்கந்தமூர்த்தி, உமையுடனும் கந்தனுடனும் இருப்பவன் என்று பொருள். பிள்ளை இல்லாமல் திருமாலின் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போது, “சோமாஸ்கந்த மூர்த்தியை…