கடம்ப மலர்

கடம்ப மலர்

விச்சுளிப் பாய்ச்சல்

விச்சுளிப் பாய்ச்சல் தொண்டை நாட்டிலிருந்து கழைக் கூத்தாடும் பெண்பிள்ளை ஒருத்தி வந்திருக்கிறாள் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. எத்தனையோ கழைக் கூத்தர்கள் மூங்கிலை நட்டு அதன்மேல் ஏறிப் பலவகை விளையாட்டுக்களைச் செய்கிறார்கள். ஆனால், இந்தக் கழைக் கூத்தியோ விச்சுளிப் பாய்ச்சல் என்ற புதுமையான விளையாட்டில் வல்லவளாம். விச்சுளி என்றால் மீன்கொத்திப் பறவைக்குப் பெயர். மீன்…

திருஅருட்பா

திருஅருட்பா இராமலிங்க சுவாமிகளின் பாடல்களுக்குட் திரு அருட்பா என்று பெயர். இது ஆறு திருமுறைகளாக அமைந் திருக்கின்றது. எல்லாம் தோத்திரப் பாடல்கள். சுவாமிகளின் புலமைத் திறத்தை இப்பாடல்களிலே காணலாம். அச்சிலே வெளிவந்திருக்கும் அருட்பாவில் 6500-க்கு மேற்பட்ட பாடல்கள் அடங்கியிருக்கின்றன. அடிகளின் பாடல்கள் பல இன்னும் அச்சில் வராமல் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர். இராமலிங்க அடிகள் கவிஞர்…

இயற்கையும் அறிவுமே இறைவன்

இயற்கையும் அறிவுமே இறைவன் கடவுள் என்பது எங்கேயோ ஒரு தனி உலகத்தில் வாழ்கின்றது; அதற்கும் நம்மைப் போல் கால், கை, மூக்கு, வாய் முதலிய உறுப்புகள் உண்டு; நம்மைப் போல் எண்ணம், செயல்கள் எல்லாம் உண்டு என்று நம்புகின்றனர் பலர். இதுமட்டும் அல்ல; கடவுள் மக்களைப் போலவே கோப தாபங்கள் உடையவர்; விருப்பு வெறுப்பு உள்ளவர்;…

சாதி வேற்றுமை

சாதி வேற்றுமை சாதி என்று தமிழில் வழங்குகிறோம். இது வடமொழிச் சொல். இதன் உண்மை உருவம் ஜாதி, ஜம் என்ற பகுதியி லிருந்து பிறந்த சொல். பிறப்பில் வேற்றுமை உள்ள பொருள்களையே ஜாதி என்ற பெயரால் வழங்கலாம். மக்கட்பிரிவு, ஜாதி என்ற பெயரால் தமிழில் குறிப்பிடவில்லை. குலம், குடி என்ற பெயர்களே மக்கட் பிரிவைக் குறிப்பவை.…

ஜீவகாருண்யம்

ஜீவகாருண்யம் நமது நாட்டிலே ஜீவகாருண்யத்தைப் பற்றிச் சிறப்பித்துப் பேசாத பெரியோர்கள் எவருமேயில்லை. மதத்தை மாற்றி அமைக்க முயன்றவர்கள் பலர்: புதிய கொள்கைகளை ஜன சமூகத்திலே புகுந்த முயன்றவர்கள் பலர். இவர்கள் நோக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். மக்கள் அனைவரும் துன்பம் இன்றி இவ்வுலகத்தில் இன்பத்துடன் வாழவேண்டும் என்பது தான் இந்த நோக்கத்திற்கு மாறுபட்ட பெரியோர்கள் எவரும் இல்லை.…

சாவாத வாழ்வு

சாவாத வாழ்வு இவ்வுலகில் என்றும் அழியாமல் வாழ்வதே சாவற்ற வாழ்வு. இதைச் சிரஞ்சீவி என்றும் கூறுவர். முதியோர் இளைஞர் களுக்கு வாழ்த்துக் கூறும் போது என்றும் சிரஞ்சீவியாக இனிது வாழ்க! என்று கூறுவர். சித்தர்கள் என்பவர்கள் தங்கள் உடலை அப்படியே வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றவர்கள் என்று நம்புகின்றனர் உடலை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளும் வித்தையில்…

அகப்பேய்ச் சித்தர்

அகப்பேய்ச் சித்தர் இவர் மனத்தைப் பேயாக உருவகம் செய்து பாடியிருக்கிறார்; ஆதலால் அகப்பேய்ச் சித்தர் என்று பெயர் பெற்றார். இவருடைய பாடல்கள் முழுவதும் உள்ளத்துக்கு உபதேசம் செய்வதாகவே அமைந்திருக்கின்றன. மனத்தைப் பார்த்து இவர் செய்யும் உபதேசம் மக்களுக்குச் செய்யும்- கூறும் – அறிவுரை யாகவே அமைந்திருக்கின்றது. சைவம் என்பதற்கு அன்பு என்பது பொருள். ஆதலால் சைவர்…

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் அகத்தியர் சித்தர்களிலே தலைசிறந்தவராகக் கருதப் படுகிறார். தமிழுக்கு முதலில் இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்பது புலவர்கள் கொள்கை. அந்த இலக்கணத்துக்கு அகத்தியம் என்று பெயர். அது முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல் என்பர். ஆனால் அந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. அகத்தியர்க்குச் சிவபெருமான் தமிழ் இலக்கணத்தை உபதேசித்தார். முருகன் அகத்தியர்க்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தார்.…

கல்லிலும் செம்பிலுமா கடவுள்?

கல்லிலும் செம்பிலுமா கடவுள்? மக்களிடம் ஆதிகாலத்திலே கடவுள் நம்பிக்கை இல்லை; இருந்ததென்று சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் அவர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. அவர்கள் ஓரளவு நாகரிகம் பெற்ற பிறகுதான் அவர்களிடம் தெய்வ நம்பிக்கையும் பிறந்தது. தெய்வ நம்பிக்கையும் அவர்கள் உள்ளத்தில் உதித்த பயத்திலிருந்து பிறந்ததுதான். இடி, மின்னல், காற்று, வெள்ளம், தீ, ஆறு,…

உதவாக்கரை மனிதர்கள்

உதவாக்கரை மனிதர்கள் இவ்வுலகிலே எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களிலே பலவகையான மாறுபாடுகள்; தோற்றங்கள். உருவத்திலே உயரம்; குட்டை; பருமன்; ஒல்லி – இத்தகைய வேற்றுமை. நிறத்திலே கருப்பு; சிவப்பு; வெண்மை; மாநிறம் – இத்தகைய நிறவேறுபாடுகள். ஒவ்வோர் அங்கங்களிலும் சிறிது சிறிது வேறுபாடுகள். இவ்வேறுபாடுகள் இயற்கையானவை; அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்தவை; நாட்டைப் பொறுத்தவை;…