கடம்ப மலர்

கடம்ப மலர்

வடவேங்கடவன்

வடவேங்கடவன் ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஒரு ஊமை, இப்படி நான்கு பேர்கள் ஒரு மலை ஏறுகிறார்கள். மலை என்றால் ஏதோ இமயத்தின் சிகரத்தைப் போன்று நீண்டு உயர்ந்த மலை அல்ல. சின்னஞ்சிறிய மலைதான். அந்த மலை மீது ஒரு கோயில். அந்தக் கோயிலிலே ஒரு தெய்வம். அந்த தெய்வத்திடம் அசையாத நம்பிக்கை…

காளத்தி அப்பர்

காளத்தி அப்பர் ‘இறைவனிடத்து இடையறா அன்பு செலுத்திய நாயன்மார்கள் அறுபத்து மூவரில் செயற்கரிய செயல் செய்தார் யார்?’ என்பது ஒரு பட்டி மண்டபத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட பொருள். அறுபத்து மூன்று அன்பர்களது செயலையும் அலசி ஆராய்வது சிரமம் என்று கருதிப் பட்டினத்தார் குறிப்பிடும் மூன்று திருத்தொண்டர்களை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர். வாளால் மகவு…

திருத்தணிகைக் குமரன்

திருத்தணிகைக் குமரன் அருணகிரியார் பிறந்து வளர்ந்து முருகன் அருள் பெற்றுப் பாடத் துவங்கியது, அண்ணாமலையிலே. ‘எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பிடல் வேண்டும்!’ என்று பிரார்த்தித்த வண்ணமாய், அண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, ஊர் ஊராகக் கடந்து, முருகன் கோயில் கொண்டிருக்கும் தலம் தலமாகச் சென்று, குன்று குன்றாக ஏறித் திருப்புகழ்…

சிங்கபுரத்து நரசிங்கன்

சிங்கபுரத்து நரசிங்கன் மகாவிஷ்ணு எடுத்த தச அவதாரத்தில் நரசிம்ம அவதாரம் ஒன்று. மற்ற அவதாரங்களை விடப் பார்ப்பவர் உள்ளங்களில் அச்சத்தை விளைவிக்கும் பயங்கரமான அவதாரம் அது. மனித உடலும் சிங்க முகமுமாக இருக்கும் உருவம் ஆதலால், பார்ப்பதற்கே அஞ்சுவோம், நாம். உபாசிப்பதற்கோ துணிவு வராது, நமக்கு. பக்தன் பிரகலாதனுக்காக, இரணியனைச் சம்ஹரிக்கத் தூணைப் பிளந்து கொண்டு…

வள்ளிமலை வள்ளி

வள்ளிமலை வள்ளி சென்ற சில வருஷங்களுக்கு முன் நான் பூனா நகரத்துக்குப் போயிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தங்கினேன். ஒரு நாள் காலை, அங்குள்ள தமிழ் அன்பர்கள் சிலரோடு நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள பார்வதி மலையில் உள்ள கோயில்களைப் பார்க்கச் சென்றேன். என் மனைவியும் உடன் வந்திருந்தாள். மலை பெரிய மலை இல்லை. திருத்தணி மலை…

வலம் வந்த விநாயகர்

வலம் வந்த விநாயகர் திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில் ஒரு சிறு கதை. அதுவும் பிள்ளையாரைப் பற்றிய கதை. பிள்ளைப் பிராயத்திலே கேட்ட கதையானாலும், வயது முதிர்ந்த பின்னும் திரும்பத் திரும்ப அந்தக் கதையைக் கேட்பதில் ஒரு சுவை. கதை இதுதான். கைலாயத்திலே ஒரு நாள் பார்வதியும் பரமேசுவரனும் தனித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் கலகப் பிரியரான நாரதர்…

பாலாற்றில் பள்ளி கொண்டான்

பாலாற்றில் பள்ளி கொண்டான் ஒரு சிறு சம்பவம், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில், அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. அது ஒரு பெரிய உண்மையையே விளக்குகிறது. விவேகானந்தர் என்னும் நரேந்திரன் பத்துப் பன்னிரண்டு வயதில் ஒரு சிறு பள்ளியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பூகோளப் பாடம் சொல்லிக் கொடுத்துக்…

வாழ்வுக்கு ஒரு வழித் துணை மார்க்கசகாயர்

வாழ்வுக்கு ஒரு வழித் துணை மார்க்கசகாயர் சில வருஷங்களுக்கு முன் நான் கும்பகோணத்துக்கு வடமேற்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ள திருப்பனந்தாளுக்குச் சென்றிருந்தேன். என்னுடன் இலக்கிய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவருக்குக் கோயில், குளம், மூர்த்தி, தலம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் என்னுடன் வந்தால் தமிழ்நாட்டின் கலை அழகைக் காணக்கூடும் என்ற நம்பிக்கை.…

வேலூர் ஜலகண்டேச்வரர் கோயில்

வேலூர் ஜலகண்டேச்வரர் கோயில் பாண்டிய மன்னனின் அமைச்சராய் அமைந்த வாதவூரர், மன்னவன் படைக்குக் குதிரைகள் வாங்கத் திருப்பெருந்துறை செல்கிறார். அங்கு குருந்த மரத்தடியில் இறைவன் தன் சீடர்களுடன் எழுந்தருளியிருப்பதைக் கண்டதும், வந்த காரியத்தை மறந்து அங்கேயே உட்கார்ந்து விடுகிறார். கொண்டு வந்த பணத்தை எல்லாம் திருக்கோயில் கட்டுவதிலே செலவு செய்கிறார். மன்னன் விடுத்த ஏவலாளர் வந்து வாதவூரரை…

சொற்கோயில்

சொற்கோயில் திருப்பாதிரிப்புலியூரிலும் அதற்கு அருகிலும் சில ஜைன சமயத்தவர்கள். வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வழிபடும் கோயில் ஒன்று அவ்வூரில் இருந்தது. மிகச் சிறிய கோயிலாக இருந்ததனால் அதைப் பெரிதாகக் கட்டவேண்டுமென்று அன்பர்கள் எண்ணினார்கள். கருங்கல்லால் கட்ட இயலவில்லை; போதிய பொருள் இல்லாததுதான் காரணம். ஆகவே செங்கல்லால் கட்டலாம் என்று எண்ணி, அதற்கு வேண்டிய முயற்சியைச் செய்தார்கள்.…