கடம்ப மலர்

கடம்ப மலர்

கழுகின் காவலன் சடாயு

கழுகின் காவலன் சடாயு கோசல நாட்டைத் தசரதன் ஆண்டு வந்த காலத்தில் பஞ்சவடியின் அருகே இருந்த பசுங் கானகத்தில் கழுகின் காவலனான சடாயு வாழ்ந்து வந்தான். கோசல நாட்டு அரசனும் கழுகின் வேந்தனும் உடலும் உயிரும் போலவும், மணியும் ஒளியும் போலவும் உயிர் நண்பராக அமைந்து வாழ்ந்தார்கள். ஆண்மையிலும் அருளிலும் தலைசிறந்து விளங்கினான் கழுகரசன். தாயின்…

தென்னிலங்கைத் தெய்வம்

தென்னிலங்கைத் தெய்வம் கணவனே தெய்வமென்று கருதி ஒழுகிய கற்புடைய மாதருள் மண்டோதரி தலை சிறந்தவளாவள். தூய வெண்ணீறு துதைந்த மேனியும், சிவனடி மறவாச் சிந்தையும் வாய்ந்த அம்மங்கை செந்நெறி வழுவாது வாழ்ந்து வந்தாள். தன் தலைவன், விதியின் விளைவால் மதிமயங்கி, நஞ்சு தோய்ந்த அமுதனைய சீதையை நயந்தான் என்றறிந்த போது மதிநலம் வாய்ந்த அம்மாது நடுங்கினாள்;…

அரக்கர் கோன் தங்கை சூர்ப்பநகை

அரக்கர் கோன் தங்கை சூர்ப்பநகை இலங்கை மா நகரம் ஒரு மங்கையால் அழிந்த தென்று யாவரும் அறிவர். கற்பிற் சிறந்த சீதையைச் சிறைசெய்த தீமையால் பேரழகு வாய்ந்த இலங்கையை அரசாண்ட இராவணன் அழிந்தான் என்பது உண்மையே. ஆயினும் இலங்கேசன் தங்கையாகத் தோன்றிய மங்கையே தமையனுக்குக் கூற்றாக அமைந்தாள் என்று கூறுதல் மிகையாகாது. அரக்கர்கோன் தங்கையாய சூர்ப்பநகை…

இலங்கை அணங்கு திரிசடை

இலங்கை அணங்கு திரிசடை கார்மேகத்தின் இடையே இலங்கும் கதிரொளி போன்று, இரக்கமற்ற அரக்கர் வாழ்ந்த இலங்கை மாநகரில் திரிசடை என்னும் நல்லாள் தோன்றினாள். அம்மங்கை இளமையிலேயே விபீடணன் தனயை என்னும் தகைமைக்கேற்ற அறிவும் சீலமும் அமைந்து விளங்கினாள் ; மது மலிந்த இலங்கைமா நகரில் மயக்குங் கள்ளைக் கண்ணெடுத்தும் பாராத கன்னியாக அமைந்தாள்; ஊனைத் தின்று…

அரக்கர்கோன் இராவணன் அருந்தவம்

அரக்கர்கோன் இராவணன் அருந்தவம் அரக்கர் என்பவர் மறப்போர் வீரர். அன்னார் ஒருகால் வானவரோடு புரிந்த பெரும் போரில் தோல்வி யுற்றனர்; இலங்கை யரசும்,செல்வமும் இழந்தனர்; பாதலம் புகுந்து பதுங்கி வாழ்வாராயினர். தருக்கிழந்த அவ்வரக்கர் குலம் தலையெடுக்கத் தசக்கிரீவன் தோன்றினான் அரக்கர் குலக் கொழுந்தாய் விளங்கிய அவ்வீரன், தன் குலப்பெருமை குன்றி நிற்கக் கண்டு மனம் குழைந்தான்.…

ஞானக் கொழுந்து

ஞானக் கொழுந்து சைவ சமயத்தில் உள்ளவர்கள் எந்தக் காரியம் செய்தாலும் கணபதியைத் தொழுது தொடங்குவது வழக்கம். பெரிய அரண்மனையின் வாயிலில் யானை நிற்பது போலத் திருக்கோயில்களில் புகும்பொழுதே யானை முகனாகிய கணபதி வாயிலில் வீற்றிருப்பதைக் காணலாம். சைவ சமயத்தில் சிவபிரானுடைய குமாரர்களாகிய விநாயகரையும் குமரவேளையும் சிவபிரானுக்குரிய மதிப்புடனே போற்றுவது வழக்கம். எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய பிரணவ…

ஆர் அறிவார்!

ஆர் அறிவார்! அடியார்: திருமூலதேவரே, தேவரீர் இறைவனைப் பற்றி எவ்வளவோ விரிவாகத் தெரிந்து கொண்டிருப்பீர்களே; அவற்றை ஒன்றும் குறைவின்றிச் சொல்ல வேண்டும். இறைவன் பெருமையை முற்றும் கேட்க எங்களுக்கு ஆசை. திருமூலர்: பெம்பெருமான் பெருமையையா கேட்கிறீர்கள்? எங்கள் அண்ணல் பெருமையை முற்றும் அறியும் ஆற்றல் உள்ளவர் யார்? ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை! அடியார்: அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நீங்கள்…

சூரிய காந்தம்

சூரிய காந்தம் உபாத்தியாயர் விஞ்ஞானத்தைப் போதிக்கிறார். ஒளியைப் பற்றிச் சொல்லித் தருகிறார்; கண்ணாடி மூலமாக ஒளிக் கதிர்கள் எப்படிப் பாய்கின்றன என்பதை விளக்குகிறார். புடைத்திருக்கும் பூதக் கண்ணாடியில் கதிர்கள் பாய்ந்தால் அவை ஓரிடத்தில் ஒன்றுபட்டு அதிக உஷ்ணத்தை உண்டாக்கும் என்று ஒரு செய்தியைச் சொல்கிறார். அவர் அதை நிரூபித்துக் காட்டுகிறார். எப்படி? பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு சிறிது…

பேரினை நீக்கிப் பிணம்என்று பேர்இட்டு

பேரினை நீக்கிப் பிணம்என்று பேர்இட்டு அவன் மனிதன் என்ற அளவில் வாழ்ந்தான். நாலுபேர் கவனித்து வந்துகூடும்படி அவனிடம் ஓர் ஆற்றலும் இல்லை. ஊரில் வாசம் செய்யும் மக்களில் அவனும் ஒருவனாக இருந்தான். வீட்டில் இருப்பவர்களுக்கு அவனைப் பற்றிய சிரத்தை இருந்தது. அவனுடைய மனைவி அவனைக் கணவனென்று கொண்டாடி இன்பம் பெற்றாள். அவன் மக்கள் அவனைத் தந்தையென்று…

காக்கையின் உபதேசம்

காக்கையின் உபதேசம் உடம்பை எடுத்த அனைவருக்கும் பசி என்பது பெரிய பிணி. அதைப் போக்கிக்கொள்ள ஒவ்வொருவரும் பாடுபடு கின்றனர். உடம்போடு பிறந்தது பசி. பசியைப் போக்கும் தானத்தைக் காட்டிலும் சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என்பது புறநானூறு. பணக்காரருக்கு ஒரு பசி, ஏழைக்கு ஒரு பசி என்பது இல்லை. பசி…