கடம்ப மலர்

கடம்ப மலர்

தர்மத்தின் வழி நடந்தால்…

தர்மத்தின் வழி நடந்தால்… பவனா என்ற ஊரில் கௌதமன் என்பவன் வாழ்ந்து வந்தான்.பிறப்பால் பிராமணன் ஆயினும், அவன் தாயின் தூண்டுதலால் எந்தத் தீய காரியத்தையும் அஞ்சாமல் செய்யும் துணிவு பெற்றிருந்தான். அப்படி இருந்தும் வைசிய குலத்தைச் சேர்ந்த மணிகுண்டலன் என்பவன் இவனுக்கு நண்பனாக இருந்தான். மணிகுண்டலன் பெருஞ் செல்வந்தருடைய மகன். சூழ்ச்சிக்காரனாகிய கெளதமன் தோழனிடமிருந்து பொருளைக்…

ஏகாதசி மகிமை

ஏகாதசி மகிமை அவந்தி நகரத்தின் எல்லைக்கப்பால் பிரஷ்டம் செய்யப்பட்ட சண்டாளன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவந்தி நகரைச் சுற்றி ஓடும் சிர்பா நதியின் கரையில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. இந்தச் சண்டாளன் மிகப் பெரிய விஷ்ணு பக்தன். ஏகாதசி அன்றைக்கு முழுப்பட்டினி இருந்து அன்று இரவு விஷ்ணு கோயிலுக்குச் சென்று மனமுருகிப் பாடும் பழக்கத்தை…

இராமலிங்கர் வரலாறு

இராமலிங்கர் வரலாறு தமிழகத்திலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே பல பெரும்புலவர்கள் வாழ்ந்தனர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர், காஞ்சி சபாபதி முதலியார், மயிலை சண்முகம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, முன்சீப் வேதநாயகம் பிள்ளை, சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இன்னும் பல புலவர்களும் வாழ்ந்தனர்.…

சமரச சன்மார்க்கம்

சமரச சன்மார்க்கம் இரக்கமே சன்மார்க்கத்திற்கு வழிகாட்டும்; சன்மார்க்கத்தில் நடக்கச் செய்யும்: துன்மார்க்கத்திலே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தும் என்பது இராமலிங்க அடிகள் கருத்து. சத் என்பதற்கு உண்மையென்பது பொருள். மார்க்கம் என்பதற்கு வழி அல்லது நெறியென்பது பொருள். சத் மார்க்கம் என்பதற்கு உண்மைநெறி என்று பொருள். சத் மார்க்கம் என்ற வடமொழித் தொடர் சன்மார்க்கம் என்று தமிழுருவாகி…

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் அருணகிரிநாதர் கி.பி. பதினாந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்தவர். முருகனையே கடவுளாகக் கொண்டு வணங்கிப் பாடி வாழ்ந்தவர். இவர் இயற்றியிருக்கும் பாடல்கள் எல்லாம் -நூல்கள் எல்லாம்- முருகன் பெருமையையே போற்றுகின்றன. இவர் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தார்; ஆதலால் அருணகிரிநாதர் எனப் பெயர்பெற்றார். இவர் இசைவேளாளர் குலத்திலே பிறந்தவர் என்பது வரலாறு. அருணகிரி என்பது திருவண்ணாமலை. இவரைப்பற்றி…

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினாராகிய அவர் களுக்கு, உலகம் செல்வம் என்று நினைக்கும் பொருளைக் கண்டால் எப்படி இருக்கும்? விருப்பு வெறுப்பின்றி வாழும் திருக்கூட்டத்தினர் ஓடானாலும் பொன்னானாலும் விருப்பு வெறுப்புக் காட்ட மாட்டார்கள்.. இரண்டுக்கும் வேறுபாடே அவர்களுக்குத் தோன்றாதாம். இரண்டையும் ஒக்கவே நோக்கும் சம திருஷ்டியுடையவர்கள் அவர்கள். ராமகிருஷ்ணர் சொல்லும்…

மலர்ச்சிலம்படி

மலர்ச்சிலம்படி பல காலமாகச் சேக்கிழாருக்குத் தொண்டர் வரலாற்றைக் காவியமாகப் பாடவேண்டும் என்று ஆசை. ஆனால் அமைச்சராக இருக்கும்போது அரசியலில் ஈடுபடும் கடமை உடையவராதலின் அமைதியாக இருந்து அப்படிச் செய்ய இயலவில்லை. தலங்களுக்கு அடிக்கடிச் சென்று வரும் வழக்கம் உடையவராதலினால் அங்கங்கே நாயன்மார் களைப்பற்றி வழங்கும் வரலாறுகளை யெல்லாம் தக்கவர்கள் வாயிலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார். இராசராச…

வஞ்சக உள்ளம்

வஞ்சக உள்ளம் ஒரு பிராமணர் நாள்தோறும் பல வீடுகளுக்குச் சென்று உபாதானம் வாங்கிவருவது வழக்கம். அப்படிப் போகும்போது ஒவ்வொரு வீட்டிலும், “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நிற்பார். அவர் வந்திருப்பது தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் அரிசி போடுவார்கள். ஒரு நாள் இந்தப் பிராமணர் ஒரு வீட்டுக்குள் சென்று, “கிருஷ்ணாய நமஹ” என்றார். வீட்டில் இருந்தவர்கள் எங்கோ…

அட்டமாசித்திகள் என்றால் என்ன?

அட்டமாசித்திகள் என்றால் என்ன? திருக்கைலாயமலையில் ஆலமர நிழலில் சிவனாரின் திருத்தொடையின் மீது உமையம்மையார் இருந்து கொண்டு அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்க, பூதத் தலைவர்களுக்கும் சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் சிவ நெறிகளையும் தருமங்களையும் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது முருகனுக்குப் பால் ஈந்த இயக்கப் பெண்கள் அறுவரும் அடக்கமாக விபூதியும் ருத்திராட்சிதமும் அணிந்து கொண்டு இறைவனிடம்…

பிட்சாடனர்

பிட்சாடனர் தேவதாரு என்னும் வனத்தில் இருந்த ரிஷிகளின் பத்தினியர் அப்பு அழுக்கற்றவர்கள் என்று திமிர் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு நேரும் போது அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்ட இறைவன் அவர்கள் முன்னால் பிச்சை எடுக்கும் வாலிப வடிவுடன் ஆடைகள் இன்றி வெறும் கோவணத்துடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக்கொண்டு வாயில் புன் முறுவலும்…