கடம்ப மலர்

கடம்ப மலர்

பிள்ளையார்பட்டி பிள்ளையார்

பிள்ளையார்பட்டி பிள்ளையார் பிள்ளையார் பட்டியில் அமைந்துள்ள விநாயகர் திருவுருவத்துக்குச் சில சிறப்பியல்புகள் உண்டு. இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து, அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர், இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும்…

அனுமனது விசுப ரூபம்

அனுமனது விசுப ரூபம் பிறப்பு நிலை கேடுஇவையாவான்; பாவம்அறத்தினொடு ஐம்பூதம்ஆவான் – உறற்கரியவானாவான் மண்ணாவான்மன்னுயிர்கள் அத்தனையும்தானாதல் காட்டினான் தான் என்று கீதா ரகஸ்யத்தையே உரைக்கின்றார், பெருந் தேவனார், தான் இயற்றிய பாரதத்தில், தேர்தட்டின் மீது திகைத்து வாள்த்தடக்கை வில்நெகிழ வாளா இருந்திட்ட அர்ச்சுனனுக்கு ‘எல்லாம் நானே ஆதலால் பலன் கருதாது உன் கருமத்தைச் செய்’ என்று…

ஆண்டவன் வடிவிலே ஒரு ஐயம்!

ஆண்டவன் வடிவிலே ஒரு ஐயம்! இன்று இறை வழிபாட்டில் நம்பிக்கையுடைய அன்பர்கள் எல்லாம் அவரவர் வீட்டில் விக்ரஹங்களையோ, இல்லை. திரு உருவப் படங்களையோ வைத்துப் பூசை செய்து வருகிறார்கள். இந்த ஆத்திக அன்பர்கள் இடையே ஒரு பிரச்சனை, யார் யார் படங்களைப் பூசைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று; இதைவிட யார் யார் திரு உருவை வைத்துக்…

கழுகின் காவலன் சடாயு

கழுகின் காவலன் சடாயு கோசல நாட்டைத் தசரதன் ஆண்டு வந்த காலத்தில் பஞ்சவடியின் அருகே இருந்த பசுங் கானகத்தில் கழுகின் காவலனான சடாயு வாழ்ந்து வந்தான். கோசல நாட்டு அரசனும் கழுகின் வேந்தனும் உடலும் உயிரும் போலவும், மணியும் ஒளியும் போலவும் உயிர் நண்பராக அமைந்து வாழ்ந்தார்கள். ஆண்மையிலும் அருளிலும் தலைசிறந்து விளங்கினான் கழுகரசன். தாயின்…

தென்னிலங்கைத் தெய்வம்

தென்னிலங்கைத் தெய்வம் கணவனே தெய்வமென்று கருதி ஒழுகிய கற்புடைய மாதருள் மண்டோதரி தலை சிறந்தவளாவள். தூய வெண்ணீறு துதைந்த மேனியும், சிவனடி மறவாச் சிந்தையும் வாய்ந்த அம்மங்கை செந்நெறி வழுவாது வாழ்ந்து வந்தாள். தன் தலைவன், விதியின் விளைவால் மதிமயங்கி, நஞ்சு தோய்ந்த அமுதனைய சீதையை நயந்தான் என்றறிந்த போது மதிநலம் வாய்ந்த அம்மாது நடுங்கினாள்;…

அரக்கர் கோன் தங்கை சூர்ப்பநகை

அரக்கர் கோன் தங்கை சூர்ப்பநகை இலங்கை மா நகரம் ஒரு மங்கையால் அழிந்த தென்று யாவரும் அறிவர். கற்பிற் சிறந்த சீதையைச் சிறைசெய்த தீமையால் பேரழகு வாய்ந்த இலங்கையை அரசாண்ட இராவணன் அழிந்தான் என்பது உண்மையே. ஆயினும் இலங்கேசன் தங்கையாகத் தோன்றிய மங்கையே தமையனுக்குக் கூற்றாக அமைந்தாள் என்று கூறுதல் மிகையாகாது. அரக்கர்கோன் தங்கையாய சூர்ப்பநகை…

இலங்கை அணங்கு திரிசடை

இலங்கை அணங்கு திரிசடை கார்மேகத்தின் இடையே இலங்கும் கதிரொளி போன்று, இரக்கமற்ற அரக்கர் வாழ்ந்த இலங்கை மாநகரில் திரிசடை என்னும் நல்லாள் தோன்றினாள். அம்மங்கை இளமையிலேயே விபீடணன் தனயை என்னும் தகைமைக்கேற்ற அறிவும் சீலமும் அமைந்து விளங்கினாள் ; மது மலிந்த இலங்கைமா நகரில் மயக்குங் கள்ளைக் கண்ணெடுத்தும் பாராத கன்னியாக அமைந்தாள்; ஊனைத் தின்று…

அரக்கர்கோன் இராவணன் அருந்தவம்

அரக்கர்கோன் இராவணன் அருந்தவம் அரக்கர் என்பவர் மறப்போர் வீரர். அன்னார் ஒருகால் வானவரோடு புரிந்த பெரும் போரில் தோல்வி யுற்றனர்; இலங்கை யரசும்,செல்வமும் இழந்தனர்; பாதலம் புகுந்து பதுங்கி வாழ்வாராயினர். தருக்கிழந்த அவ்வரக்கர் குலம் தலையெடுக்கத் தசக்கிரீவன் தோன்றினான் அரக்கர் குலக் கொழுந்தாய் விளங்கிய அவ்வீரன், தன் குலப்பெருமை குன்றி நிற்கக் கண்டு மனம் குழைந்தான்.…

ஞானக் கொழுந்து

ஞானக் கொழுந்து சைவ சமயத்தில் உள்ளவர்கள் எந்தக் காரியம் செய்தாலும் கணபதியைத் தொழுது தொடங்குவது வழக்கம். பெரிய அரண்மனையின் வாயிலில் யானை நிற்பது போலத் திருக்கோயில்களில் புகும்பொழுதே யானை முகனாகிய கணபதி வாயிலில் வீற்றிருப்பதைக் காணலாம். சைவ சமயத்தில் சிவபிரானுடைய குமாரர்களாகிய விநாயகரையும் குமரவேளையும் சிவபிரானுக்குரிய மதிப்புடனே போற்றுவது வழக்கம். எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய பிரணவ…

ஆர் அறிவார்!

ஆர் அறிவார்! அடியார்: திருமூலதேவரே, தேவரீர் இறைவனைப் பற்றி எவ்வளவோ விரிவாகத் தெரிந்து கொண்டிருப்பீர்களே; அவற்றை ஒன்றும் குறைவின்றிச் சொல்ல வேண்டும். இறைவன் பெருமையை முற்றும் கேட்க எங்களுக்கு ஆசை. திருமூலர்: பெம்பெருமான் பெருமையையா கேட்கிறீர்கள்? எங்கள் அண்ணல் பெருமையை முற்றும் அறியும் ஆற்றல் உள்ளவர் யார்? ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை! அடியார்: அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நீங்கள்…