கடம்ப மலர்

கடம்ப மலர்

சாதி வேற்றுமை

சாதி வேற்றுமை சாதி என்று தமிழில் வழங்குகிறோம். இது வடமொழிச் சொல். இதன் உண்மை உருவம் ஜாதி, ஜம் என்ற பகுதியி லிருந்து பிறந்த சொல். பிறப்பில் வேற்றுமை உள்ள பொருள்களையே ஜாதி என்ற பெயரால் வழங்கலாம். மக்கட்பிரிவு, ஜாதி என்ற பெயரால் தமிழில் குறிப்பிடவில்லை. குலம், குடி என்ற பெயர்களே மக்கட் பிரிவைக் குறிப்பவை.…

ஜீவகாருண்யம்

ஜீவகாருண்யம் நமது நாட்டிலே ஜீவகாருண்யத்தைப் பற்றிச் சிறப்பித்துப் பேசாத பெரியோர்கள் எவருமேயில்லை. மதத்தை மாற்றி அமைக்க முயன்றவர்கள் பலர்: புதிய கொள்கைகளை ஜன சமூகத்திலே புகுந்த முயன்றவர்கள் பலர். இவர்கள் நோக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். மக்கள் அனைவரும் துன்பம் இன்றி இவ்வுலகத்தில் இன்பத்துடன் வாழவேண்டும் என்பது தான் இந்த நோக்கத்திற்கு மாறுபட்ட பெரியோர்கள் எவரும் இல்லை.…

சாவாத வாழ்வு

சாவாத வாழ்வு இவ்வுலகில் என்றும் அழியாமல் வாழ்வதே சாவற்ற வாழ்வு. இதைச் சிரஞ்சீவி என்றும் கூறுவர். முதியோர் இளைஞர் களுக்கு வாழ்த்துக் கூறும் போது என்றும் சிரஞ்சீவியாக இனிது வாழ்க! என்று கூறுவர். சித்தர்கள் என்பவர்கள் தங்கள் உடலை அப்படியே வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றவர்கள் என்று நம்புகின்றனர் உடலை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளும் வித்தையில்…

அகப்பேய்ச் சித்தர்

அகப்பேய்ச் சித்தர் இவர் மனத்தைப் பேயாக உருவகம் செய்து பாடியிருக்கிறார்; ஆதலால் அகப்பேய்ச் சித்தர் என்று பெயர் பெற்றார். இவருடைய பாடல்கள் முழுவதும் உள்ளத்துக்கு உபதேசம் செய்வதாகவே அமைந்திருக்கின்றன. மனத்தைப் பார்த்து இவர் செய்யும் உபதேசம் மக்களுக்குச் செய்யும்- கூறும் – அறிவுரை யாகவே அமைந்திருக்கின்றது. சைவம் என்பதற்கு அன்பு என்பது பொருள். ஆதலால் சைவர்…

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் அகத்தியர் சித்தர்களிலே தலைசிறந்தவராகக் கருதப் படுகிறார். தமிழுக்கு முதலில் இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்பது புலவர்கள் கொள்கை. அந்த இலக்கணத்துக்கு அகத்தியம் என்று பெயர். அது முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல் என்பர். ஆனால் அந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. அகத்தியர்க்குச் சிவபெருமான் தமிழ் இலக்கணத்தை உபதேசித்தார். முருகன் அகத்தியர்க்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தார்.…

கல்லிலும் செம்பிலுமா கடவுள்?

கல்லிலும் செம்பிலுமா கடவுள்? மக்களிடம் ஆதிகாலத்திலே கடவுள் நம்பிக்கை இல்லை; இருந்ததென்று சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் அவர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. அவர்கள் ஓரளவு நாகரிகம் பெற்ற பிறகுதான் அவர்களிடம் தெய்வ நம்பிக்கையும் பிறந்தது. தெய்வ நம்பிக்கையும் அவர்கள் உள்ளத்தில் உதித்த பயத்திலிருந்து பிறந்ததுதான். இடி, மின்னல், காற்று, வெள்ளம், தீ, ஆறு,…

உதவாக்கரை மனிதர்கள்

உதவாக்கரை மனிதர்கள் இவ்வுலகிலே எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களிலே பலவகையான மாறுபாடுகள்; தோற்றங்கள். உருவத்திலே உயரம்; குட்டை; பருமன்; ஒல்லி – இத்தகைய வேற்றுமை. நிறத்திலே கருப்பு; சிவப்பு; வெண்மை; மாநிறம் – இத்தகைய நிறவேறுபாடுகள். ஒவ்வோர் அங்கங்களிலும் சிறிது சிறிது வேறுபாடுகள். இவ்வேறுபாடுகள் இயற்கையானவை; அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்தவை; நாட்டைப் பொறுத்தவை;…

பிரமனுடைய ஓர் நாள்

பிரமனுடைய ஓர் நாள் வேதத்தில் மனிதனுடைய ஆயுட்காலம் நூறாண்டுகளாகும் என்று குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் வந்த ஆழ்வாரும் “வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேனும்” என்று பேசுகிறார். எனவே வேதத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற இந்தப் புராணங்கள் ஆயிரம், பதினாயிரம் என்று கணக்குப் போடுவதில் ஏதோ ஒரு புதுமை இருக்க வேண்டும். புராண ஆய்வாளர்கள், ‘வர்ஷ’ என்ற சொல் இப்பொழுது…

பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றிய கதை

பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றிய கதை சத்தியயுகம் என்று கூறப்படும் முதலாவது யுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரதூய்மன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். கதிரவனும் வெட்கப்படும்படியான உடல் ஒளியும், இந்திரனும் அஞ்சும் பேராற்றலும் பெற்றவனாவான். வெறும் உடல் வன்மையோடு மட்டுமல்லாமல் வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.…

நான்முகன் கதை

நான்முகன் கதை முன்னொரு காலத்தில் தேவாசுரப் போர் மிகக் கடுமையாக நடந்தது. இப்போரில் தேவர்கள் தோற்றனர். தோற்ற தேவர்கள் பிரம்மாவிடம் ஓடிச் சென்று தங்கள் பரிதாபமான நிலையைக் கூறி வருந்தினர். அப்பொழுதெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலையாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது. அவர்கள் குறையைக் கேட்ட…