கடம்ப மலர்

கடம்ப மலர்

சோமசுந்தரன் சாட்சி

சோமசுந்தரன் சாட்சி இராசசேகரனுக்குப்பின் அவன் மகன் குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்யும் நாளில் இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது. திருப்புத்தூரிலிருந்து ஒரு பார்ப்பனன் தன் மனைவியோடு மதுரையை நோக்கிக் காட்டு வழியே வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் நீர் வேட்கையால் வருந்தும் தன் மனைவியையும் கைக்குழந்தையையும் ஆலமரத்தின் நிழலில் உட்கார வைத்து…

வேதம் உணர்த்தும் கடவுள்

வேதம் உணர்த்தும் கடவுள் வேதம் என்ற சொல் “வித்யா” என்ற பொருளுடையது. ஞானம் தரும் நூலே வேதம் எனப்படுகிறது. கிருதயுகமே இதன் தொடக்ககாலம் என்பர். அக் காலத்தில் சிவனின் வாக்கினின்று பிரணவம் தோன்றிற்று. அதனின்றே வேதங்கள் எல்லாம் தோன்றின என்று கூறப்படுகிறது. எனவே வேதம் என்பது இறைவன் அருளிச் செய்தது என்ற கருத்து நிலவியது. நைமி…

எல்லாம் வல்ல சித்தர்

எல்லாம் வல்ல சித்தர் அபிடேக பாண்டியனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் வேண்டிய பொருளைத் தருவதற்காக இறைவன் எல்லாம் வல்ல சித்தராக உருக்கொண்டு வந்தார். வட்டமாகிய மயிர்ச் சடையும், நீறு பூசிய நெற்றியும் குண்டலம் தரித்த செவியும், புலித் தோல் ஆடையும், காலில் சிலம்பும் பாதுகையும் கொண்டு புன்முறுவல் பூத்த முகத்தினராய் அங்காடித் தெருக்களும் மாளிகைச் சந்திப்புகளும்…

கிருஷ்ண அவதாரம் முடிவு பெறுதல்

கிருஷ்ண அவதாரம் முடிவு பெறுதல் பாரதப்போரில் கண்ணன் நேரிடையாகப் பங்கு கொண்டதால் பலராமன் தனக்கு வேண்டிய மாணவனாகிய துரியோதனனுக்கு நேரிடை உதவி செய்ய முடியாமல் போய்விட்டது. விதுரனும் பலராமனும் கோயில் தலங்கள் சென்று வழிபட வெளியேறி விட்டனர்; பலராமனின் சேனைகள் துரியனுக்குத் துணை செய்தன. கண்ணன் அதை மறுக்கவில்லை கண்ணன் பூமியின் சுமையைக் குறைக்கப் பிறந்தான்.…

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் வரலாறு செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலே திருவாதவூரிலே ஆமாத்திய அந்தணர் குலத்திலே இறைவனருளால் தோன்றியவர் திருவாதவூரர். இளமையிலே எல்லாக் கலைகளையும் பயின்ற வாதவூரரைப் பாண்டியன் தன் அமைச்சராக அமர்த்தித் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துப் பாராட்டினான். வாதவூரர் பாண்டியனுக்கு அமைச்சராய் அறநெறி வழுவாமல் தம் கடமையைச் செய்து வந்தார். ஆயினும் உலகியற் பற்றின்றி மெய்ப்பொருளுணர்த்தவல்ல அருட்குருவை நாடியிருந்தார்.…

கண்ணனுக்குக் கால் வலித்தது

கண்ணனுக்குக் கால் வலித்தது “நாரதா, வா, இன்று பஜனைக் கோஷ்டிகளையெல்லாம் ஒரு நோட்டம் விட்டு விட்டு வரலாம்” என்றான் கண்ணபிரான். “இன்று என்ன இப்படித் தங்கள் திருவுள்ளத்துக்குத் தோன்றியது?” என்று கேட்டார் நாரதர். “இப்பொழுது புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பஜனை அமர்க்களமாக இருக்கும். இந்தப் பெரிய பட்டணத்தில் எனக்கு எத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்க…

நம்பினோர் கெடுவதில்லை

நம்பினோர் கெடுவதில்லை கங்கைக் கரையில் பண்டிதர் ஒருவர் கங்கையாற்றின் பெருமையைப் பற்றியும் அதில் நீராடுகிறவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சிறப்பும் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். பலர். அவருடைய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது கைலாசத்தில் இருந்த கைலாசபதியைப் பார்த்துப் பார்வதி தேவி, “கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் பாவம் ஒழிந்து நல்ல கதி கிடைக்குமென்றால்,…

மருள் நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு

மருள் நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு நள்ளிருள். திருப்பாதிரிப்புலியூரில் ஒரு சைனமடத்தில் இருந்த தருமசேனர் துடியாய்த் துடிக்கிறார். வயிற்றிலே தோன்றிய சூலை நோய் அவரால் பொறுக்க முடியவில்லை. குடலையே புரட்டி முடங்கச் செய்தது அந்த நோய். எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்து விட்டார்கள். மந்திரமும் பார்த்தார்கள். தண்ணீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தார்கள்; தீரவில்லை. மயிற் பீலியினால்…

ஊடலும் ஆடலும்

ஊடலும் ஆடலும் அப்பர் சுவாமிகள் காட்டும் கற்பனைக் காட்சிகளில் மற்றொன்று. இந்தக் காட்சியில் முக்கியமான பாத்திரங்கள் இறைவனும் கங்கையும் உமாதேவியாரும் ஆவர். பகீரதனுடைய வேண்டுகோளுக்குக் கங்கை எளிதில் இணங்கவில்லை. பல காலம் தவம் செய்த பிறகு கங்கை தோன்ற, “என்னுடைய முன்னோர்களின் என்பு மேல் பாய வேண்டும்” என்று பகீரதன் அவளை வேண்டினான். அப்போது கங்கை…

ஆவி வாழும் வீடு

ஆவி வாழும் வீடு சின்ன வீட்டை ஒருவர் கட்டினார்; மண்ணினால் எடுத்த வீடு; கூரை வேய்ந்த வீடு. மரம், மண், தென்னங்கீற்று இந்த மூன்றையும் வைத்துக்கொண்டே அவர் இதைக் கட்டிவிட்டார். இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தால், தரையிலே இது நிற்பதற்கும், நிழல் தருவதற்கும் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றன என்பதை எளிதிலே கண்டுகொள்ளலாம். வீட்டின் கூரையைத்…