கடம்ப மலர்

கடம்ப மலர்

காலை முதல் இரவு வரை

காலை முதல் இரவு வரை ஒரு பொருளினிடம் அன்பு வைத்துவிட்டால் அதைப் பற்றியே எப்போதும் நினைக்கத் தோன்றுகிறது. ஒருவரிடம் எல்லையற்ற பற்று உண்டானால் அவருடைய விருப்பு வெறுப்புகளை உணர்வதும், அவருடைய திருக்கோலத்தை எண்ணுவதும், அவர் பேச்சைச் சிந்திப்பதுமாகவே காலம் போகும். தான் விரும்பிய காதலனை ஓர் இளம் பெண் மணந்து கொள்கிறாள். அவன் இன்னும் அவளைத்…

இடரீர்! உமக்குஓர் இடம்

இடரீர்! உமக்குஓர் இடம் பெரிய சோம்பேறி அவன்; எப்படியோ வந்து அந்தக் குடும்பத்தில் ஒட்டிக் கொண்டான். அவன் எப்படி வந்தான், ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்பவற்றைச் சொல்லக்கூட முடியாது. அவனுடைய அதிருஷ்டமோ, இவர்களுடைய துரதிருஷ்டமோ அவனுக்கு இங்கே புகலிடம் கிடைத்தது. அவனைச் சோம்பேறியென்று முதலில் நினைக்கத் தோன்றியது. ஆனால் வரவர அவன் பொல்லாதவன் என்று தெரிந்தது. அவனால்…

யமனது எச்சரிக்கை

யமனது எச்சரிக்கை உலகில் பிறந்தவர்கள் யாவரும் இறந்துபோவார்கள். உடம்பைக் காய கற்பத்தால் நீண்ட காலம் உறுதியாக இருக்கும்படி செய்து வாழ்கிறவர்களும் ஏதேனும் ஒரு நாள் இறந்தே போவார்கள். இந்த உலகமே ஒரு காலத்தில் உருக்குலைந்து அழியும் என்றால், ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டான உடம்பு எப்போதுமே அழியாமல் இருக்கும் என்று சொல்லலாமா? உயிரும் உடம்பும் கூடித் தோன்றுவதைப்…

பெருந்தேன் காயகல்பம்

பெருந்தேன் காயகல்பம் உடம்பை நோயில்லாமல் பல காலம் வாழ வைக்கும் மூலிகைகளும் காயகற்பங்களும் இருக்கின்றன என்று சித்த வைத்தியம் தெரிந்தவர்கள் சொல்வார்கள். அமிர்தத்தை உண்டமையால் தேவர்கள் நோயில்லா உடம்புடையவராகித் தத்தமக்கு வரையறுத்த நாள் முழுவதும் வாழ்கிறார்கள். ஆனால் எந்த மூலிகையைச் சாப்பிட்டாலும், எந்த அமிர்தத்தை நுகர்ந்தாலும் மரணத்தை வெல்ல முடியாது. பன்னூறாண்டுகள் வாழ்ந்திருந்ததாகச் சொல்லும் சித்தர்களும்…

நால்வகைச் சங்காரம்

நால்வகைச் சங்காரம் மனிதன் செயலற்றுக் கிடந்தால், “பிணம் போலக் கிடக்கிறான்” என்று கூறுவர். அவன் கைகால் இருந்தும் இயங்காமையால் அப்படிச் சொல்லத் தோன்றுகிறது. மனிதன் தினமும் உறங்குகிறான். அப்போது அவன் செயலற்றுக் கிடக்கிறான். கொலையாளியும் குழந்தையும், குடும்பியும் துறவியும் தூக்கத்தில் ஒரே நிலையை அடைகிறார்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்களின் மதிப்பில் வேறுபாடு உண்டு.…

உத்தமன் கோயில்

உத்தமன் கோயில் தரிசாகக் கிடக்கிறது ஒரு நிலம். அதில் கள்ளியும் எருக்கும் படர்ந்திருக்கின்றன. பாம்புப் புற்றும் ஒருபால் இருக்கிறது. அந்த இடத்துக்கு யாருமே போவதில்லை. கிணறு வெட்டினால் பாதாளம் வரைக்கும் சென்றால்தான் தண்ணீரைக் காணலாம். அந்த நிலத்தைப் பற்றி யாருக்கு என்ன கவலை இருக்கும்? திடீரென்று ஒருநாள் அதற்கு மதிப்பு உண்டாயிற்று. அந்தப் பக்கத்தில் வெறும்…

அஞ்சுள ஆனை

அஞ்சுள ஆனை ஒருவன் பெரிய காட்டுக்குள் சிக்கிக்கொண்டான். அந்தக் காட்டில் வாழும் கொடிய பிராணிகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை. பாம்பு, தேள், பூரான் ஆகியவை எங்கும் நெளிகின்றன. முள்ளும் கல்லும் குண்டும் குழியும் எங்கும் இருக்கின்றன. இவற்றினின்றும் எப்படியோ தப்பி மீளலாம் என்றால், எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கும் யானைகள் ஐந்து இருக்கின்றன.…

விச்சுளிப் பாய்ச்சல்

விச்சுளிப் பாய்ச்சல் தொண்டை நாட்டிலிருந்து கழைக் கூத்தாடும் பெண்பிள்ளை ஒருத்தி வந்திருக்கிறாள் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. எத்தனையோ கழைக் கூத்தர்கள் மூங்கிலை நட்டு அதன்மேல் ஏறிப் பலவகை விளையாட்டுக்களைச் செய்கிறார்கள். ஆனால், இந்தக் கழைக் கூத்தியோ விச்சுளிப் பாய்ச்சல் என்ற புதுமையான விளையாட்டில் வல்லவளாம். விச்சுளி என்றால் மீன்கொத்திப் பறவைக்குப் பெயர். மீன்…

திருஅருட்பா

திருஅருட்பா இராமலிங்க சுவாமிகளின் பாடல்களுக்குட் திரு அருட்பா என்று பெயர். இது ஆறு திருமுறைகளாக அமைந் திருக்கின்றது. எல்லாம் தோத்திரப் பாடல்கள். சுவாமிகளின் புலமைத் திறத்தை இப்பாடல்களிலே காணலாம். அச்சிலே வெளிவந்திருக்கும் அருட்பாவில் 6500-க்கு மேற்பட்ட பாடல்கள் அடங்கியிருக்கின்றன. அடிகளின் பாடல்கள் பல இன்னும் அச்சில் வராமல் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர். இராமலிங்க அடிகள் கவிஞர்…

இயற்கையும் அறிவுமே இறைவன்

இயற்கையும் அறிவுமே இறைவன் கடவுள் என்பது எங்கேயோ ஒரு தனி உலகத்தில் வாழ்கின்றது; அதற்கும் நம்மைப் போல் கால், கை, மூக்கு, வாய் முதலிய உறுப்புகள் உண்டு; நம்மைப் போல் எண்ணம், செயல்கள் எல்லாம் உண்டு என்று நம்புகின்றனர் பலர். இதுமட்டும் அல்ல; கடவுள் மக்களைப் போலவே கோப தாபங்கள் உடையவர்; விருப்பு வெறுப்பு உள்ளவர்;…