கடம்ப மலர்

கடம்ப மலர்

எப்படிப் புகழ்வேன்!

எப்படிப் புகழ்வேன்! கிள்ளிவளவன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். அரசவை கூடியிருந்தது. அரசனுடைய சுற்றமாகிய அமைச்சர், படைத் தலைவர் முதலியோரும் புலவரும் பாணரும் பிறரும் அவையில் அமர்ந்திருந்தனர். புலவர்கள் அன்று கிள்ளி வளவனுடைய இயல்புகளைப் பாராட்டிப் பல பாடல்களைப் பாடினார்கள். ஒரு புலவர் அவனுடைய ஈகையைச் சிறப்பித்துப் பாடினார். “கற்பகமும் காரும் தோல்வி யுறும்படி ஈந்து உவக்கும் பெரு…

திருக்கடவூர் அபிராமி

திருக்கடவூர் அபிராமி “இந்தப் பைத்தியம் இங்கே கண்ணை மூடிக் கொண்டு நிற்கிறதே! சரபோஜி மகாராஜா இங்கே வந்திருக்கிறார். கோயிலுக்கு வருவாரென்று தெரிகிறது. இந்தப் பைத்தியம் அம்பிகை சந்நிதியில் எதையாவது உளறிக் கொண்டிருக்குமே!” என்றார் ஒருவர். “உளறினால் உமக்கு என்ன? மகாராஜா வந்தால் யாராவது இவரைக் கழுத்தில் கைகொடுத்து நெட்டித் தள்ளுகிறார்கள். மகாராஜா வரும் வரையில் இவரை…

சித்தி வேழம்

சித்தி வேழம் அரண்மனை வாசலில் யானையைக் கட்டியிருப்பார்கள். அரனுடைய மனையாகிய கோயிலிலே கூடத் திருவாசலில் ஒரு யானை இருக்கிறது. அரண்மனை வாசல்யானை மதம் கொள்ளும்; துதிக்கையாகிய ஒரே கையை உடையது. அரன் கோயில் வாசலில் உள்ள யானை மதத்தை அழிப்பது; ஐந்து கைகளை உடையது. அந்த யானை கடவுள் வரிசையைச் சேர்ந்தது. கணபதியாகிய ஆனைமுகக் கடவுளே…

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் எந்தக் காரியம் செய்தாலும் செய்யா விட்டாலும் விநாயகனைப் பூசித்து வழிபடுவதை மறக்க மாட்டாள் பாட்டி தமிழ்ப் பாட்டியாகிய ஒளவையைத்தான் சொல்கிறேன். தமிழ் தளரா நாவும் அன்பு தளரா உள்ளமும் உடைய அந்தப் பெருமாட்டி, “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்;– கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீஎனக்குச்சங்கத் தமிழ்மூன்றும் தா”…

யானைக்கும் கலங்கார்

யானைக்கும் கலங்கார் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமுறை மகா நாட்டிலே கலந்து கொள்வதற்காகப் போயிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த செய்தி இது. மகாநாட்டுக்கு இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய மட்டக் களப்பில் வாழும் தமிழர்களில் பலர் வந்திருந்தனர். திருக்கோணமலை என்ற சிவத்தலம் அந்தப் பகுதியில்தான் இருக்கிறது. அவர்கள் என்னை மட்டக்களப்புக்கு வந்து பேசவேண்டும் என்று அழைத்தார்கள்; ஒப்புக்கொண்டேன்.…

தொட்டிலில் வளரும் முருகன்

தொட்டிலில் வளரும் முருகன் சோழ நாட்டில் விளத்தொட்டி என்ற ஊர் இருக்கிறது. குத்தாலம் ரெயில்வே நிலையத்துக்கு வடக்கே உள்ளது அது. அந்த ஊரில் முருகக்கடவுள் தொட்டிலில் வளரும் குழந்தையாக, இள முருகனாகக் காட்சி அளிக்கிறான். அந்த ஊருக்கு வில்வவனமென்றும், கூவிளங் காடென்றும் பெயர்கள் உண்டு. கூவிளம் என்பது வில்வத்துக்குப் பெயர். கூவிளம் என்பதிலுள்ள பிற்பகுதியும் முருகன்…

கிரௌஞ்ச மலை

கிரௌஞ்ச மலை மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென் று நினைக்கிறான். பல சமயங்களில் அவன் அதை மீட்டும் மீட்டும் நினைப்பதில்லை. அதனால் அந்த நினைப்புச் செயலாக மாறுவதில்லை. எண்ணிய எண்ணத்தில் திண்மை இன்மையால் செயலாக மாறி அதில் வெற்றியடையுமட்டும் அந்த எண்ணம் சிதறாமல் இருப்பதில்லை. பல சமயங்களில் அவன் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறது.…

கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?

கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்? சாதாரணமாகச் சில விலங்குளையும், செடி கொடிகளையும் நாம் பார்க்கிறோம். அவை மக்கட் சமுதாயத்திலிருந்து பெற்றுக் கொள்வது மிக மிகக் குறைவு. ஆம்; அவை பெற்றுக் கொண்டதைப் போன்று பன்மடங்கு பயனைத் திருப்பிக் கொடுக்கின்றன. ஒரு கறவை மாட்டை எடுத்துக் கொள்வோம். அது ஒரு ரூபாய் மதிப்புள்ள தீனி தின்றால், இரண்டு…

புழுவிற் கடைமனிதர்

புழுவிற் கடைமனிதர் மனிதப் பிறப்பு மிகமிக உயர்ந்தது. உயிரினம் அனைத்துக்கும் மனிதனே நாயகன். ஆண்டவனுக்கு அடுத்து அணியார் சிறப்புடையது மனித இனமேயாகும். ஏன்? ஆண்டவனையே கூட, வளர்ந்த மனிதர்கள் ஏவல் கொள்வார்கள். இத்தகு சிறந்த மனித இனம் இன்று தாழ்ந்து கிடக்கும் நிலையினை எண்ணினால் வேதனை பெருகுகிறது. ஏன்? எதனால்? மனிதனை, மனித இயல்புகளை ஆராய்வதில்…

ஸ்ரீராமகிருஷ்ணரின் தாய்மொழிப் பற்று

ஸ்ரீராமகிருஷ்ணரின் தாய்மொழிப் பற்று உண்மையைக் கடைப்பிடிக்கிறவர்கள், சொன்னபடி செய்வதில் மிகுந்த சிரத்தை காட்டுவார்கள்; பிறரிடமிருந்தும் இந்தச் சிரத்தையை எதிர்பார்ப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், சிறிய விஷயங்களில் கூட இந்தச் சிரத்தையைக் காட்டினார். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிட்டால் அதைச் செய்தே முடிப்பார். சொல்வதும் செய்வதும் ஒன்றாயிருக்கவேண்டு மென்பது இவர் கருத்து. உண்மை யென்பதும் இதுதானே? கூறுகிறார்:-…