கடம்ப மலர்

கடம்ப மலர்

அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால்

அறிவற்ற பிராணியும் இறைவனை வழிபட்டால் திருச்சிக்கு அருகில் திருஎறும்பூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது அதைத் திருவரம்பூர் என்று வழங்குகிறார்கள். திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வரும் வழியில் அந்தத் தலம் இருக்கிறது. சிறிய குன்று. அங்கே எறும்பு ஆண்டவனைப் பூசை பண்ணிப் பேறு பெற்றதாம். திருவானைக்காவல் என்ற தலத்தைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அங்கே யானை பூசை…

தேவசேனை திருமணம்

தேவசேனை திருமணம் எம்பெருமான் ஆறுமுகமும் பன்னிரு திருத்தோளும் உடையவன். அந்தப் பன்னிரண்டு திருத்தோளையும் ஒருபெருமாட்டி அணைகிறாள். அவள் யார்? அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற இரண்டு மகளிரும் திரு மாலின் குழந்தைகள். திருமால் முருகனுக்கு மாமன். ‘நாம் நம் அத்தை மகன் முருகனை உரிமையோடு அடையலாம்’ என்ற அகங்கார நினைப்பு அவர்களுக்கு இல்லை. அத்தை மகளையோ, மாமன்…

சோமாஸ்கந்தமூர்த்தி

சோமாஸ்கந்தமூர்த்தி இந்திரன் ஒரு சமயம் திருப்பாற்கடலுக்குச் சென்றிருந்தான். திருமால் பாம்பணையில் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மார்பில் சோமாஸ்கந்தமூர்த்தி இருந்தார். ஒரு பக்கம் சிவன், மற்றொரு பக்கம் உமை, நடுவில் முருகப் பெருமான் உள்ள கோலமே சோமாஸ்கந்தமூர்த்தி, உமையுடனும் கந்தனுடனும் இருப்பவன் என்று பொருள். பிள்ளை இல்லாமல் திருமாலின் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போது, “சோமாஸ்கந்த மூர்த்தியை…

எல்லாம் பிரம்மம்

எல்லாம் பிரம்மம் அகங்காரம், மமகாரம் அற்ற நிலையில் இறைவன் திருவருளோடு ஒன்றுபட்ட ஒருவனுக்கு உலகம் முழுவதும் நல்லதாக இருக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரியவர் ஒரு நாள் பிரசங்கத்தில், ”உலகத்திலுள்ள எல்லாம் பிரம்மம்” என்று சொன்னாராம். அதை ஒருவன் கேட்டுவிட்டு, “எல்லாம் பிரம்மம்” என்று கூவிக் கொண்டே போனான். போகும் வழியில்…

பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர் விசுவாமித்திரர்; கெளசிகன் என்ற பெயரோடு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி. வாளெடுத்துப் போர் செய்யும் மரபில் உதித்த அவருக்கு, காட்டில் போய் உட்கார்ந்து கொண்டு தவம் செய்யும் ஆற்றல் இயல்பிலே உண்டாகாது. நாட்டைத் துறந்து, அரசாட்சியைத் துறந்து, அரசனுக்குரிய இன்பத்தைத் துறந்து, வன விலங்குகளிடையே உறைந்து கடுமையான…

விகட சக்கர விநாயகர்

விகட சக்கர விநாயகர் விநாயகப் பெருமான் ஒரு சமயம் விசுவரூபம் எடுத்தார். அந்தத் திரு உருவத்தை நமக்குக் காட்டுகிறார் கச்சியப்ப சிவாசாரியார். எப்படிக் காட்டுவது? இவ்வளவு அடி உயரம் என்று அளந்து காட்ட முடியாது. அதனை ஒரு வகையில் நமக்குப் புலப்படும் படியாகச் செய்கிறார். சூரிய மண்டலம் எல்லாவற்றையும் விட மேலே இருப்பது. அதற்குக் கீழேதான்…

கடவுளின் திருவுருவங்களுக்குப் பூசை ஏன்?

கடவுளின் திருவுருவங்களுக்குப் பூசை ஏன்? விவேகானந்த சுவாமி அமெரிக்காவுக்குச் சென்று சிகாகோ நகரத்தில் பெரிய விரிவுரை நிகழ்த்தினார். அங்கே கூடியிருந்த உலகப் பேரறிஞர்கள் நுட்பமான கருத்துக்கள் புதைந்த அவர் சொற்பொழிவைக் கேட்டுப் பரவசமாகப் போனார்கள். அந் நாட்டைச் சேர்ந்த பலர் அவரிடம் அன்புகொண்டு அணுகிப் பணிந்தார்கள். அவர்களுக்குள் ஒருவர் ஒரு நாள் விவேகானந்தரைப் பார்த்துக் கேட்டார்;…

சின் முத்திரையின் பொருள் என்ன?

சின் முத்திரையின் பொருள் என்ன? தட்சிணாமூர்த்தி அகப்பொருளில் ஒன்று சொல்வார்கள். தலைவனும் தலைவியும் எல்லாப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டும் என்பார்கள். இங்கே அம்பிகை தவம் செய்ய, பரமேசுவரனும் தவம் செய்யத் தொடங்கினானாம். சிவபெருமான் எதற்காகத் தவம் செய்தான்? சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் பிரம்ம தேவனின் புதல்வர்கள். அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்.…

சிவலிங்கத் தத்துவம்

சிவலிங்கத் தத்துவம் சிவலிங்கத் தத்துவத்தைப் பற்றி இப்போது பலர் பலவிதமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மேல் நாட்டினர் அதற்கு அருவருப்பான பொருள் சொல்கிறார்கள். அதைக் கண்டு நம் மிடையேயும் சிலர் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இங்கே சற்று ஆராயலாம் என்று நினைக்கிறேன். நாம் பார்க்கின்ற சிவலிங்கம் அருவுருவம் என்று சொல்கிறார்கள். கண்ணில் தெரிகிற எல்லாமே…

வரகுண பாண்டியனின் சிவபக்தி

வரகுண பாண்டியனின் சிவபக்தி வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் மதுரை மாநகரில் இருந்தான். அவன் மகா சிவபக்தன். சிவபெருமானுடைய நினைவாகவே எப்போதும் இருப்பான். தன் மந்திரியோடு அவன் ஒரு சமயம் நல்ல கோடைக் காலத்தில் வந்து கொண்டிருந்தான். வழியில் பல மரங்கள் இருந்தன. வேப்ப மரங்களும் இருந்தன. அந்த மரங்களில் நிறையப் பழங்கள் இருந்தன.…